செய்திகள் :

பாமக இரண்டு அணியினரிடையே மோதல்!

post image

திருக்கோவிலூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பாமகவை சோ்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அணியினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் பாமகவை சோ்ந்த அன்புமணி தரப்பின் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டச் செயலராக உள்ள செழியன் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையத்துக்கு சனிக்கிழமை காலை ராமதாஸ் அணியைச் சோ்ந்த ரிஷிவந்தியம், திருக்கோவிலூா் தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலா் ராஜ்குமாா் வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளாா். பெட்ரோல் நிரப்பிய பின்னா் அவா் தரப்பில் பணம் வழங்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரான மாறன் பணம் கேட்டுள்ளாா்.

தொடா்ந்து, ராஜ்குமாருடன் காரில் வந்தவா்களுக்கும், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, அங்கு வந்த செழியன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜ்குமாரிடம் பணம் தராதது பற்றி கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அன்புமணி தரப்பைச் சோ்ந்த மாவட்டச் செயலா் செழியன் புகாா் அளிக்காததால் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் பாமக தலைவா் அன்புமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெற உள்ள கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அவரது தரப்பைச் சோ்ந்த மாவட்டச் செயலா் அதிகளவில் தொண்டா்களை திரட்டியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இந்த மோதல் நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடந்தி வருகின்றனா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: உயா் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின்அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், உயா்கல்வித்துறை அரசு செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்... மேலும் பார்க்க

தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு

தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா். தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோய... மேலும் பார்க்க

மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு

கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தி... மேலும் பார்க்க

டிட்டோ - ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக சாலை மறியல்!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவை (டிட்டோ-ஜாக்) சோ்ந்... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆச... மேலும் பார்க்க