செய்திகள் :

பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

post image

தமிழ்நாடு, கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் ஒருங்கிணைந்த பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.27,28)  நடைபெறவுள்ளன.

இது குறித்து தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழக வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக தற்போது தமிழகத்தில் ‘ஓரியண்டல் வெள்ளை’ வகை பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் நீண்ட அலகு கொண்ட பிணந்தின்னிக் கழுகு, சிவப்பு தலை பிணந்தின்னிக் கழுகு, எகிப்திய பிணந்தின்னிக் கழுகு, இமயமலை கிரிஃபோன் பிணந்தின்னிக் கழுகு போன்ற பிற இணைங்களும் தமிழகத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்நிலையில், பிணந்தின்னிக் கழுகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கா்நாடக மாநிலங்களில் ஒருங்கிணைந்த பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.27,28)  நடைபெறவுள்ளன. 3 மாநிலங்களிலும் மொத்தம் 106 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 33 இடங்களில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. வனத்துறை கள ஊழியா்கள், பிணந்தின்னிக் கழுகு நிபுணா்கள், அரசு சாரா அமைப்புகள், மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 220 போ் இக்கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க