செய்திகள் :

பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை: ``எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக..." - ஸ்டாலின் கண்டனம்!

post image

கேரள முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை இன்று (மே 27, 2026) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிம மணல் நிறுவனம் (CMRL) மற்றும் பினராயி விஜயனின் மகள் டி. வீணாவின் 'எக்ஸாலஜிக்' (Exalogic) நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான நிதிப் பரிவர்த்தனை வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கடுமையான அரசியல் போராக மாறியுள்ளது.

திமுக - ஸ்டாலின்
திமுக - ஸ்டாலின்

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், ``பா.ஜ.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து நடத்தும் ஒரு திட்டமிட்ட தாக்குதல். மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அமலாக்கத்துறையைக் கண்டு சிபிஐ(எம்) கட்சியோ அல்லது பினராயி விஜயனோ ஒருபோதும் அஞ்சமாட்டார்கள், பின்வாங்கவும் மாட்டார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தியது. அதைப் பயன்படுத்தியே பா.ஜ.க ஒரு முதலமைச்சரை சிறையில் அடைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது. டெல்லியில் பா.ஜ.க-வுக்கு காங்கிரஸ் எப்படி உதவியதோ, அதேபோல் தான் கேரளாவிலும் செய்கிறது" எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``முன்னாள் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவதை இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை தீவிர கவலையோடு வெளிப்படுத்துகின்றன. அதே வேளையில், "பினராயி விஜயனை இன்னும் ஏன் பா.ஜ.க குறிவைக்கவில்லை?" என்று தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி, பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சில காங்கிரஸ் தலைவர்களின் வெற்று வாதங்களையும் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் குப்பைகளை கொட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தவெக திருவெறும்பூர்... மேலும் பார்க்க

`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' - பொன்முடி சாடல்

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, "முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

மும்பை: பக்ரீத் ஆடுகளை அகற்ற கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை; பன்றியை கொண்டு வந்த இந்து அமைப்புகள்

பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் விலங்குகளை பலியிடுவது வழக்கம். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான ஆடுகளை தாங்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் பலியிடுவது வழக்கம். மும்பை மீரா ரோட... மேலும் பார்க்க

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' - விஸ்வநாதன்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் வ... மேலும் பார்க்க

கேரளம்: பினராயி விஜயனின் வீடு, மருமகன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் இடி ரெய்டு - பின்னணி என்ன?

கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியுடன், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் கம்பெனி நிதி ஒப்பந்தம் செய்ததும், செய்யப்படாத ... மேலும் பார்க்க