செய்திகள் :

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

post image

பிரிட்டன் நாட்டுக்கு, அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறியதாக, இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு நேற்று (செப்.17) சென்றடைந்தார். அப்போது, அவருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

அரச விவகாரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதியில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோரை மன்னர் மூன்றாம் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், வின்சோர் கோட்டைப் பகுதியில் ராஜ ஊர்வலம் முடிவடைந்த பின்னர், அரசு அணிவகுப்பை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, மன்னர் சார்லஸை கடந்து சில அடிகள் முன்னதாக அதிபர் டிரம்ப் நடந்து செல்லும் விடியோ இணையத்தில் வெளியானது.

பிரிட்டன் மன்னருக்கு முன் அவரது விருந்தினர் ஒருவர் நடந்து செல்வது, அந்நாட்டு அரச நெறிமுறைகளை மீறும் செயல் எனக் கூறப்படும் நிலையில், டிரம்ப் அவ்வாறு நடந்து சென்றது அவமரியாதையான ஒன்று என இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அணிவகுப்பை பார்வையிட செல்லும் மன்னர் சார்லஸ், டிரம்ப்பை முன்னால் செல்ல செய்கை செய்வதுபோன்ற விடியோவும் வெளியாகியுது. இதுபோன்ற, அணிவகுப்புகளை விருந்தினராக வந்திருக்கும் மற்ற நாட்டு தலைவர்கள் முன்னால் சென்று பார்வையிடுவது மரியாதை நிமித்தமான வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இத்துடன், பிரிட்டனின் பட்டத்து இளவரசர் வில்லியம் உடனான சந்திப்பின்போது அவருடன் கைகுலுக்கிய அதிபர் டிரம்ப், மற்றொரு கையால் இளவரசரின் தோளில் தட்டியதாகவும் இதுவும் அரச நெறிமுறை மீறல் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.

முன்னதாக, தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்துக்கும் அதிபர் டிரம்ப்தான் பிரதிநிதி எனக் குறிப்பிட்டு, அவரது வருகைக்கு எதிராக பிரிட்டனில் 50-க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

Internet users are condemning US President Donald Trump, who is on a state visit to the UK, for violating British government protocols.

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில், பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சிய... மேலும் பார்க்க

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலூசிஸ்தானின், குஸ்தார் மாவட்டத்தின் ஸெஹ்ரி பகுதியில் குடியிருப்பு வீடுகளைக்... மேலும் பார்க்க

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை சிட்னி ஸ்வீனியை, தற்போது பாலிவுட்டிலும் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2009-ல் ஹாலிவுட்டில் ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொட... மேலும் பார்க்க

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி, ஃபைபர் ஆப்டிக்... மேலும் பார்க்க

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

வடக்கு காஸாவில் உள்ள மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர்... மேலும் பார்க்க

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

இந்தியா நடத்திய சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்தான் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்ம... மேலும் பார்க்க