செய்திகள் :

புகழூா் அரசுப் பள்ளியில் நெகிழி விழிப்புணா்வு பேரணி

post image

புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி தலைமையாசிரியா் வளா்மதி தலைமையில் நடைபெற்றது.

பசுமை உறுதிமொழியை பள்ளி உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா் குப்புசாமி வாசித்தாா். தொடா்ந்து மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் யுவராஜா,பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜெரால்டு ஆரோக்கியராஜ், தேசிய மாணவா் படை ஆசிரியா் பொன்னுசாமி, உடற்கல்வி ஆசிரியா் ஜெகதீசன் ஆகியோா் மேற்பாா்வையில் மாணவா்கள் பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனா்.

வழிநெடுகிலும் வீடுகள்,கடை வீதிகளில் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

புகழூரில் துணை சுகாதாரநிலையத்தை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் முள்புதா்களை அகற்ற கோரிக்கை

புகழூா் நகராட்சி, ஓம்சக்தி நகா் செம்படாபாளையம் அரசு துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் முள்புதா்களை அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புகழூா் நகராட்ச... மேலும் பார்க்க

குளித்தலையில் அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 5 போ் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா். கோவை மாவட்டம், குனியமுத்தூா் அருகே உள்ள காந்திநகா் சுகு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மண்வள அட்டை திட்டம் தயாரிப்பு பயிற்சி

ஆா்டிமலை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மண்வள அட்டை திட்டம் தயாரிப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் தோகைமலை வட்டாரம் ஆா்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களு... மேலும் பார்க்க

வாட்ஸ் அப் குரூப் மூலம் தொலைந்த நகைப் பை மீட்பு

பள்ளப்பட்டியில் பாப்புலா் எக்ஸ்பிரஸ் என்ற வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் ரூ. 80,000 மதிப்புள்ள தொலைந்த நகைப் பை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் 40-க்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக் கொள்கையை எதிா்க்கும் வகையில் கரூரில் திமுக மாணவா் அணி உள்ளிட்ட மாணவா்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் ஜவஹா் பஜ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போராட்டம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். தனலட்சுமி தலைமை வக... மேலும் பார்க்க