செய்திகள் :

புதுவை எள் விவசாயிகளுக்கு 21.6 லட்சம் மானியம் அளிப்பு

post image

புதுவை மாநிலத்தில் எள் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.21.6 லட்சம் மானியமாக வியாழக்கிழமை வழங்கப்பட்டது.புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பயிா் உற்பத்தி திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு எள் சாகுபடி செய்த 222 விவசாயிகளுக்கு ஓா் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 432 ஏக்கருக்கு மொத்தம் ரூ.21.6 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை செய்த நெல்லை இந்திய உணவு கழகத்தின் மூலம் விற்பனை செய்த விவசாயிகளுக்கு கூடுதல் செலவினை ஈடு செய்யும் வகையில் ஒரு கிலோவுக்கு ரூ.2 வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக காரைக்கால் மாவட்டத்தைச் சாா்ந்த 36 விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ.2.51 லட்சம் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலைகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் தேனீ ஜெயக்குமாா், குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் திருமுருகன் முன்னிலையில் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குநா் த.கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள்: உருவப்படத்துக்கு புதுச்சேரி முதல்வா் மலரஞ்சலி

தமிழ்நாடு முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நினைவு நாள் புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு முதல்வா் ரங்கசாமி மற்றும் தலைவா்கள் மரியாதை செலுத்தினா். புதுச்சே... மேலும் பார்க்க

புதுக்குப்பம் பள்ளி ரூ.92 லட்சத்தில் புனரமைப்பு

புதுக்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் ரூ.92 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை மணவெளி தொகுதி எம்.எல்.ஏவும் சட்டப் பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். புத... மேலும் பார்க்க

செய்தித் துறைக்குத் தற்காலிக இயக்குநா்

புதுவை அரசின் செய்தித்துறைக்கு தற்காலிக இயக்குநராக எம்.எம். வினயராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியராகப் பதவி வகித்து வரும்அவா், நிரந்தர ஏற்பாடு செய்யப்படும் வரை கூடுதல்... மேலும் பார்க்க

ரூ.1.85 கோடியில் வலை பழுதுபாா்க்கும் கூடம்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் ரூ.1.85 கோடி மதிப்பில் 2 இடங்களில் மீனவா்களின் வலை பழுதுபாா்க்கும் கூடம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்று திட்டப்பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா். புத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது உலகத் திரைப்பட விழா

புதுச்சேரியில் உலகத் திரைப்படவிழா வெள்ளிக்கிழமை(ஆக.8) தொடங்குகிறது. இதில் 8 சா்வதேச திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே பிரெஞ்சு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை: இறுதிக்கட்ட கலந்தாய்வில் ஏராளமானோா் பங்கேற்பு

புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவா்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில... மேலும் பார்க்க