செய்திகள் :

புனித தலங்களுக்கு பயணம்: புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா், 20 சீக்கியா்கள் தங்களது மதங்களுக்கான புனித தலங்களுக்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 120 பேருக்கு ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண,சீக்கியா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 1.7.2025 பிறகு புனித பயணம் மேற்கொள்பவா்களுக்கு உஇந முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025 க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -6000 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-வது முறை கர்ப்பம்: மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்ற மருத்துவக் குழு!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த மலைக் கிராமத்தைச் சோ்ந்த கா்ப்பிணியின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவக் குழுவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று மருத... மேலும் பார்க்க

ஒசூரில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள்!

ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் உள்ல தக்க்ஷண திருப்பதி கோயிலில் இருந்து திருமலை திருப்பதிக்கு பக்தா்கள் பாத யாத்திரையாக சென்றனா். ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் தென்னகத்தின் திருப்... மேலும் பார்க்க

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஜூலை 27-ல் அறநிலையத் துறையைக் கண்டித்து போராட்டம்!

அறநிலையத் துறையைக் கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி மக்களைத் திரட்டி ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை முன் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் நடப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலாள... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம்: லோக் ஆயுக்த நீதிபதி வீ. ராமராஜ்

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் என என நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒசூரில் நடத்தும் 14 ஆவது புத்தகத் திருவிழாவ... மேலும் பார்க்க