செய்திகள் :

புனே: "ரூ.10,000-க்கு 10 ஆண்டு கொத்தடிமைகளாக இருந்தோம்" - கரும்பு வெட்டும் 27 தொழிலாளர்கள் மீட்பு

post image

மகாராஷ்டிராவில் புனே, சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளர்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.

அது போன்று புனே அருகில் உள்ள டவுண்ட் தாலுகாவில் இருக்கும் ராஹு என்ற கிராமத்திற்கு, அகில்யா நகர் மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகக் கொத்தடிமையாக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொத்தடிமையாக இருந்த ஒருவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் ரெய்டு நடத்தி இரண்டு கர்ப்பிணி பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 27 பேரை மீட்டனர்.

கொத்தடிமைகளாக இருந்தவர்கள்
கொத்தடிமைகளாக இருந்தவர்கள்

அவர்கள் கொடுத்துள்ள புகாரில், 2015 ஆம் ஆண்டு ரூ.10 ஆயிரம் முன்பணம் கொடுத்து கரும்பு வெட்டுவதற்காக தங்களை அழைத்து வந்ததாகவும், அதன் பிறகு தங்களது சொந்த கிராமத்திற்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டதாகவும், மார்க்கெட் உட்பட வெளியில் எங்குச் சென்றாலும் எங்களைப் பின் தொடர்ந்து வந்து கண்காணித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

சொந்த ஊரில் நடக்கும் சுப காரியங்கள், இறப்புக்களுக்குக் கூட செல்லவிடாமல் துன்புறுத்தி வந்ததாகவும் அவர்கள் தங்களது புகாரில் தெரிவித்தனர்.

கடந்த 20ம் தேதி அவர்களில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொய் சொல்வதாகக் கூறி அந்த நபரை நிலக்கிழார் தனது தோட்டத்தில் இருந்த அறையில் அடைத்து வைத்தார்.

அதன் பிறகுதான் ஒருவர் தப்பிச்சென்று போலீஸில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் இரண்டு பேர் கர்ப்பமாக இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்ட அடுத்த நாள் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தது.

அவர்கள் அனைவருக்கும் வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களை போலீஸார் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைக் கொத்தடிமையாக அடைத்து வைத்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க