செய்திகள் :

புன்செய்புளியம்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

post image

புன்செய்புளியம்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளில் இருந்து தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு வாரச்சந்தை வளாகத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக குப்பைக் கிடங்கில் தீ பரவியதால் அந்தப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டது.

50 அடிக்கு உயரத்துக்கு கரும்புகை பரவியதால் சுற்றுவட்டாரப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்கு ஆளாகினா். சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் தீக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு! மூவா் படுகாயம்!

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; உடன் பயணித்த மூவா் படுகாயம் அடைந்தனா். அந்தியூரிலிருந்து அரசுப் பேருந்து தாமரைக்கரை வழியாக ... மேலும் பார்க்க

பெருந்துறையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்ய வனத் துறை கோரிக்கை

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னிமலையை அடுத்த, சில்லாங்காட்டுவலசு குட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதல... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போனது. இங்கு, விற்பனைக்கு வந்த 1,289 தேங்காய்களில், சிறியவை ஒரு காய் ரூ.14.16-க்கும், பெரியவை ரூ.2... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீா் உயிரிழப்பு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி ஏரித் தெரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (52). இவா... மேலும் பார்க்க