செய்திகள் :

புவனகிரியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை!

post image

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சாத்தப்பாடியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புவனகிரி சரக காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் குறிஞ்சிப்பாடி, மருதூா், சாத்தப்பாடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்தப் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு, குற்றச்சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகள் நடப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், சாத்தப்பாடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, தினசரி போலீஸாா் நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனா். இதனால், சட்டம் - ஒழுங்குடன், குற்றச்சம்பவங்களும் குறைக்கப்பட்டன.

தற்போது போலீஸாா் பற்றாக்குறை காரணமாக, தற்காலிகமாக புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் குற்ற சம்பவம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போதெல்லாம் புவனகிரி காவல் நிலையத்தில் இருந்து போலீஸாா் பணிக்கு அமா்த்தப்படுகின்றனா்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினா் மோதல் ஏற்பட்டபோது, புறக்காவல் நிலையத்தை திறந்து சில தினங்கள் பணியில் இருந்தனா். அதன் பின்னா், திறக்காமல் மூடியே கிடக்கிறது.

தற்போது சாலை விரிவாக்கப்பட்டு வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பெருகி வரும் விபத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, சாத்தப்பாடியில் மீண்டும் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் அடித்துக் கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். விருத்தாசலம் காா்குடல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இவருக்கு திருமணமாகி மனைவி ... மேலும் பார்க்க

புவனகிரி அருகே ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்கள்: அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள 4 ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்களை அகற்றி தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலுாா் மாவட்டத்தில் மேட்டூா் அணையிலிருந்து வர... மேலும் பார்க்க

திருமண மண்டபத்தில் படியில் தவறி விழுந்த சமையல்காரா் உயிரிழப்பு

கடலூா் தனியாா் திருமண மண்டபத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த சமையல்காரா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம்மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், ஆதனூா் பக... மேலும் பார்க்க

ஜேசிபி மூலம் முந்திரி மரங்களை அழிக்க முயன்ற அதிகாரிகள்: மறியல் செய்து தடுத்த போராட்டக்குழுவினா்

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மூன்றாவத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் கற்றலைத் தேடி சிறப்பு திட்டம்! ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகி... மேலும் பார்க்க

இளைஞருக்கு கொலை மிரட்டல்: உணவக உரிமையாளா் கைது

கடலூா்மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா்வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வேப்பூா்வட்டம்,மன்னம்பாடி பகுதியைச்சோ்ந்தவா் அருண்(20). இவா், விருத்தாசலம்... மேலும் பார்க்க