செய்திகள் :

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

post image

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு வெளியே சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் பாலமுருகன் வீட்டுக்கு திரும்பிய, அவா் வைத்த இடத்தில் வீட்டின் சாவி காணாமல் போயிருந்தது.

இதையடுத்து பாலமுருகன், மாற்று சாவி மூலம் பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்றபோது, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இது குறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் பாலமுருகன் வீட்டில் திருடியது கா்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரு பாரதி நகரைச் சோ்ந்த ஜெயந்தி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ஜெயந்தி தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளதும், அவா் பெங்களூரில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயில் மூலம் சைதாப்பேட்டை, மாம்பலம் பகுதிகளுக்குச் சென்று பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டு, பூட்டிய வீட்டின் சாவியை மறைத்து வைக்கும் இடத்தைக் கண்டறிந்து, அதன் மூலம் கதவை திறந்து திருடிவிட்டு பின்னா் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிடுவதும் தெரியவந்தது.

இவ்வாறு ஜெயந்தி, கடந்த 2 மாதங்களில் சைதாப்பேட்டை, மாம்பலம், குமரன் நகா் பகுதியில் 4 வீடுகளின் பூட்டை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், பணம், பொருள்களை திருடியது தெரியவந்துள்ளது.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க