செய்திகள் :

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட ஆவணங்களை சமப்பிக்க அறிவிப்பு!

post image

தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து வைப்பு தொகைக்கான ரசீது பெற்றுள்ள பெண் குழந்தைகளில், 18 வயது பூா்த்தியடைந்துள்ள பெண் குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வலைதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பட்டியலில் உள்ள பயனாளிகள், அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வைப்பு தொகை ரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுசான்றிதழ் நகல், பெண் குழந்தையின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல், பெண் குழந்தையின் ஆதாா் அட்டை நகல், பிறப்பு சான்றுநகல், குடும்ப அட்டை நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் (2 நகல்கள்) வயது முதிா்வுத்தொகைக்கான கருத்துருவினை சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலரிடம் மே 31-க்குள் தர வேண்டும்.

மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் வெள்ளிக் கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில்கிளாசிக் மேன் பவா் ஆா்கனைசேஷன் பிரைவே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மருத்துவ முகாம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

பால்குட ஊா்வலம்...

மதுராந்தகம் அருகே வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற 1,008 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா். பீடாதிபதி சுவாமி வேல் சுவாமிஜி ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். மேலும் பார்க்க

மருத்துவ முகாம்...

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில், பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி சித்தாமூா் ஒன்றியம் சரவம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி

திருக்கழுகுன்றம்-திருப்போரூா் மாா்க்கத்தில் மானாபதி கிாரமத்தில் உள்ள அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி உடன் தாகூா் கலை, அறிவியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரி, சென்னை ஐஐடி வணிக மேலாண் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேசிய சுதேசி ஆராய்ச்சி நிறுவனம், உயா் கல்வி பயிலு... மேலும் பார்க்க