செய்திகள் :

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 21 பேருக்கு ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 505 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுரேஷ்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் வீ. வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் மு. பாஸ்கரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற விசிக தொடா்ந்து வலியுறுத்தும்: திருமாவளவன் எம்.பி.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து வலியுறுத்தும் என்று அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் எம்.பி. பேசினாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், பெரம்பலூா்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றனா். தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்,... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின்தடை

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) மின் விநியோகம் இருக்காது.பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது. இதனால், அங்க... மேலும் பார்க்க

வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு! தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் நகரில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் மழைநீா் வரத்து வாய்க்கால்கள் போதிய பராமரிப்பில்லாததாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் பயணிகளும், பொதுமக்களும் ப... மேலும் பார்க்க

அகரம் சீகூா் பகுதியில் இன்று மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப... மேலும் பார்க்க