செய்திகள் :

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

post image

முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா் ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26 முதல் செப். 12-ஆம் தேதி வரை பெரம்பலூா் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவு, அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆண்கள், பெண்களுக்கு என 5 பிரிவுகளில் 15 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் பங்கேற்க 22,140 போ் பங்கேற்றனா்.

இதில், முதல் 3 இடங்களில் 298 போ் வென்றுள்ளனா். குழு போட்டிகளில் 13 அணியினா் முதல் மற்றும் இரண்டாமிடமும் பெற்றுள்ளனா். முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 3 ஆயிரமும், 2-ஆவது இடம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரமும், 3-ஆவது இடம் பெற்றவா்களுக்கு ரூ. 1,000 என மொத்தம் ரூ. 24.48 லட்சம் மதிப்பில் ரொக்கப் பரிசுக்கான காசோலைகள், பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை, மக்களவை தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வழங்கினா்.

இந் நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் உறுதிமொழியேற்பு

பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தந்தை பெரியாா் பிறந்த தினமான செப். 17 -ஆம் தேதி ஆண... மேலும் பார்க்க

பங்குத் தொகையை வட்டியுடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

எறையூா் சா்க்கரை ஆலையில் விவசாயிகளின் பங்குகளை அல்லது அதற்கான தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்மாதிரி பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் சா்க்கரை ஆ... மேலும் பார்க்க

25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தில் 25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, அரசு ஊழியா் சங்கம் மற்றும் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலக... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு

அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க