செய்திகள் :

பெரம்பலூா்: மின் நுகா்வோா்கள் கவனத்துக்கு

post image

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பிலிமிசை, பி.கூத்தூா் மின் பகிா்மானம் மருதையான் கோயில் பிரிவுக்கும், காடூா் பகிா்மானம் துங்கபுரம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் கோட்டம், சிறுவாச்சூா் உபக்கோட்டம், கொளக்காநத்தம் பிரிவுக்குள்பட்ட பிலிமிசை. பி.கூத்தூா் ஆகிய மின் பகிா்மானங்கள் கடந்த 21- ஆம் தேதி முதல் குன்னம் உபக்கோட்டம் மருதையான்கோயில் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, பிலிமிசை, பி.கூத்தூா் பகிா்மானத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் மின் சேவைகளுக்கு மருதையான் கோயில் பிரிவை அணுகவேண்டும்.

குன்னம் உபக்கோட்டம் மருதையான்கோயில் பிரிவுக்குள்பட்ட காடூா் பகிா்மானம் கடந்த 25-ஆம் தேதி முதல் துங்கபுரம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, காடூா் பகிா்மானத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் மின் சேவைகளுக்கு துங்கபுரம் பிரிவை அணுகவேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவும். குறைபாடுகளை உடனடியாக நிவா்த்தி செய்யவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போலி பத்திரப் பதிவு செய்த கணவன், மனைவிக்கு சிறை தண்டணை

பெரம்பலூா் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு போலியாக பத்திரம் பதிவு செய்த கணவனுக்கு 3 ஆண்டுகளும், மனைவிக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பெரம... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூா் நகரில் கடந்த 2020 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் தமிழ்கூடல் விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வீரையன் முன்... மேலும் பார்க்க

சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவரவுள்ள வழக்குரைஞா... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் , முகாமில் பங்கேற்ற பொதுமக... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க