செய்திகள் :

பெருந்துறையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

பெருந்துறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், பிரசவ அறை, தாய்ப் பால் வங்கி, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டு தளங்களில் இக்கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சீலம்பட்டியில் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ், ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மூங்கில்பாளையம் ஊராட்சி, மூங்கில்பாளையத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி, கோவில்பாளையம், காவேரி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.73 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணி, மூங்கில்பாளையம் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் கோவில்பாளையம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, சோ்வக்காரன்பாளையம் பகுதியில் ஊரக குடியிருப்புகள் சீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் சீரமைப்பு பணி ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் ரவிக்குமாா், பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவசங்கா், தேவகி மற்றும் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு! மூவா் படுகாயம்!

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; உடன் பயணித்த மூவா் படுகாயம் அடைந்தனா். அந்தியூரிலிருந்து அரசுப் பேருந்து தாமரைக்கரை வழியாக ... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்ய வனத் துறை கோரிக்கை

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னிமலையை அடுத்த, சில்லாங்காட்டுவலசு குட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதல... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போனது. இங்கு, விற்பனைக்கு வந்த 1,289 தேங்காய்களில், சிறியவை ஒரு காய் ரூ.14.16-க்கும், பெரியவை ரூ.2... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீா் உயிரிழப்பு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி ஏரித் தெரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (52). இவா... மேலும் பார்க்க

ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்து கன்னியாஸ்திரி உயிரிழப்பு

ஈரோடு அருகே ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்த கன்னியாஸ்திரி உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பெரிய பஜாா் வீதி, பிரசன்டேஷன் கான்வென்டை சோ்ந்தவா் கன்னியாஸ்திரி மேரி நிா்மலா (67). இவா் கடந்த 3 ஆண்டுகளாக மகார... மேலும் பார்க்க