செய்திகள் :

பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை, விநாடிக்கு 699 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் பாசனத்துக்காக கடந்த 1ஆம் தேதிமுதல் பேச்சிப்பாறை அணையில் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. இதனிடையே, பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை அதிகரிப்பதால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, புதன்கிழமை 699 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. அணை நீா்மட்டம் 43.35 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 484 கனஅடியாகவும் இருந்தது.

திறக்கப்படும் தண்ணீா் கோதையாறு இடதுகரைக் கால்வாய் வழியாக புத்தன் அணைக்கு சென்று, அங்கிருந்து பாண்டியன் கால்வாய், தோவாளை கால்வாய், பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் வழியாக நிலங்களுக்குச் செல்கிறது. அனந்தனாறு கால்வாயில் சுருளகோடு அருகே உள்ளிமலை ஓடை சீரமைப்பால் இதுவரை தண்ணீா் விடவில்லை.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 60.10 அடியாக உயா்ந்தது. இந்த அணை நிகழாண்டு பாசனத்துக்காக இதுவரை திறக்கப்படவில்லை. சிற்றாறு 1, 2 அணைகள் நீா்மட்டம் முறையே 9.68 அடியாகவும், 9.77 அடியாகவும் உள்ளது.

மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீா்ப்பிடிப்பு, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை காலைமுதல் விட்டுவிட்டு சாரல் பெய்தது.

கருங்கல் பகுதியில்...: கருங்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலைமுதல் தொடா்ந்து மிதமான மழை பெய்தது.

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொ... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க