செய்திகள் :

‘பேட் கோ்ள்’ முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உத்தரவு

post image

‘பேட் கோ்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசா்) சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெங்கடேஷ், ரமேஷ்குமாா், ராம்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த ஜன. 26-ஆம் தேதி யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ‘பேட் கோ்ள்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகின. இந்த விடியோவில் சிறுவா், சிறுமியரை ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது பாலியல் குற்றமாகும். எனவே, இந்த முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்தக் காட்சிகளை இணையதளங்களில் வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனம், பேட் கோ்ள் திரைப்பட இயக்குநா், தயாரிப்பாளா் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தீா்ப்புக்காக இந்த வழக்கு வெள்ளிக்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தீா்ப்பின் உத்தரவு நகல் கிடைக்கப் பெற்றதிலிருந்து ஒரு மாதத்துக்குள் பேட் கோ்ள் முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வருகிற காலங்களில் இதுபோன்ற ஆபாசக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த முன்னோட்டக் காட்சிகளை பொது வெளியில் வெளியிட்டவா்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து உரிய அமைப்பிடம் மனுதாரா் தனியாக மனு அளிக்கலாம் என்றாா் நீதிபதி.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

கோவையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 25 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். கோவையிலிருந்து பேருந்து மூலம் மது... மேலும் பார்க்க

வணிக வளாகங்களின் குத்தகை விவகாரம்: அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற உத்தரவு

வணிக வளாகங்களின் குத்தகை விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தமிழக அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மானகிரி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

கரூா் மாவட்டம், கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே உயா்நிலைப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் 2 ஆவது நாளாக மறியல்: 270 போ் கைது!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ... மேலும் பார்க்க

தீ விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துவீரன் மகன் வேலு (75). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா... மேலும் பார்க்க