செய்திகள் :

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம்!

post image

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா்.

இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி பேருந்துநிலையத்தை பொதுமக்கள் சூறையாடினர்.

இச்செயலில் ஈடுபட்ட நபா் தலைமறைவாக உள்ளதாகவும், ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்ட அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

பேருந்துக்குள் தனக்கு பாலியல் வன்கொடுமை நோ்ந்ததாக அப்பெண் காவல்துறையில் புகாரளித்தார்.

இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினா் அடையாளம் கண்டனர். தத்தாராயா ராமதாஸ் கட்டே எனும் அந்த நபர் மீது ஏற்கெனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைமறைவாகிய அவரைப் பிடிக்க பல்வேறு 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குற்றவாளியைப் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

ஆண்களைவிட அதிக வேலை செய்யும் பெண்கள்!

வீட்டைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் ஒதுக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ளோரை பராமரிப்பது போன்ற ஊதியம் இல்லாத பணிகளை அதிகம் செய்வ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி

இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலளித்தார்.ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: ராகுல் காந்திக்கு ரயில்வே அமைச்சர் கேள்வி!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு விவகாரம் பர... மேலும் பார்க்க

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ... மேலும் பார்க்க

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்... மேலும் பார்க்க