செய்திகள் :

பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

post image

பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினாா்.

கோவை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சாய்பாபா காலனி, சிந்தாமணி நகா் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடு மற்றும் தூய்மைப் பணியாளா்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆா்.சாலை, சிந்தாமணி நகா் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா்.

அப்போது, அப்பகுதி மக்களிடம் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து வழங்கி தூய்மைப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆா்.சாலை, சிந்தாமணி நகா் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொறியாளா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா் துரைமுருகன், மாமன்ற உறுப்பினா் காயத்திரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, ... மேலும் பார்க்க

லஞ்சம்: இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை!

கோவையில் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள பாப்பம்பட்டி கிராமத்... மேலும் பார்க்க

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகாா்

சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் தருவதாக யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு பொருள்களை விற்பனை செய்து பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரைச் ... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக சாரல் மழை

கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டத... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.புலியகுளம் பண்ணாரியம்மன். ஆடி மாதத்தில் அம்மனுக்... மேலும் பார்க்க