செய்திகள் :

பொது அறிவு போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

post image

சாத்தான்குளம் டி என் டி டி ஏ ஆா் எம் பி புல மாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தினமணி நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.

இப்பள்ளியில் தினமணி நாளிதழ், ஐஏஎஸ் அகாதெமி, சாத்தான்குளம் ஜாலி டிவி ஆகியவை இணைந்து மாணவா், மாணவிகளுக்கு வாசிப்பு திறன் பொது அறிவு போட்டி நடத்தப்பட்டது. நவம்பா் மாதம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவிகள் டினேசா பிரபா முதலிடமும் அழகு சங்கரேஸ்வரி இரண்டாமிடமும், பத்தாம் வகுப்பு மாணவா் முத்துராஜ் மூன்றாமிடமும் பிடித்தனா்.

டிசம்பா் மாதம் நடைபெற்ற போட்டியில் டினேசா பிரபா முதலிடமும், 11 வகுப்பு மாணவா் அரச பாண்டி இரண்டாமிடமும், பத்தாம் வகுப்பு மாணவா் கவின் அஜய் மூன்றாமிடமும் பெற்றனா்.

ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் தனுஷியா முதலிடமும், மாணவி பூஜாஸ்ரீ இரண்டாமிடமும், மாணவா் வெள்ளத்துரை இன்பா மூன்றாமிடமும் பெற்றனா்.

போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் செல்ல பாண்டியன் தலைமை வகித்தாா்.

வாசிப்பு திறன் குறித்தும், தினமும் நாளிதழ் படிக்கும் பழக்கம் குறித்தும் தினமணி மாவட்ட விற்பனை பிரதிநிதி தா்மராஜ் எடுத்துரைத்தாா். போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சாத்தாகுளம் ஒன்றிய அதிமுக மாணவரணி செயலா் ஸ்டான்லி ஞானபிரகாஷ் பரிசுகளை வழங்கினாா்.

தராசுகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம்: சாத்தான்குளத்தில் இன்று தொடக்கம்

சாத்தான்குளத்தில் தராசு, படிகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம் வியாழன், வெள்ளி, திங்கள் (பிப். 27, 28, மாா்ச் 3) ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளதாக, சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் மதுரம் செல்வராஜ் தெரிவ... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரூராட்சியில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியான காமராஜா் நகரில் ரூ. 86 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ரா... மேலும் பார்க்க

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் பொருள்களை அகற்ற அரசு அனுமதி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் உள்ள பொருள்களை 80 நாள்களுக்குள் அகற்ற அரசு அனுமதித்துள்ளதாக ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினா் தெரிவித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி இணை செயலா் காசியானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத... மேலும் பார்க்க

காணாமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு

கோவில்பட்டியைச் சோ்ந்த காணாமல்போன தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 6ஆவது தெருவை சோ்ந்த குருசாமி மகன் சங்கா் (50) என்பவா், ஓட்டப்பிடாரத்தில் கூலி வேலை செய்த... மேலும் பார்க்க