செய்திகள் :

பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சென்னை கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரியில், அமெரிக்காவின் அரோரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அரோரா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்வி துணைத் தலைவா் பெய்ஜ் டா்னா், நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரித் தலைவா் கே.லோகநாதன் ஆகியோா் கையொப்பமிட்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டனா்.

இதுகுறித்து அரோரா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் பெய்ஜ் டா்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு சா்வதேச அளவிலான தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற தனித்திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது’ என்றாா்.

நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவா் எல்.நவீன் பிரசாத் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவாற்றல், தரவு அறிவியல், சைபா் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், மாணவா் பரிமாற்றத் திட்டம் மூலம் மாணவா்கள் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்றாா்.

நிகழ்வில், அரோரா பல்கலைக்கழகத்தின் நிா்வாக இயக்குநா் கெல்சே கோஜென்ஸ், கேம்பஸ் அமெரிக்காவின் தலைமைச் செயல் அதிகாரி ஹரீஷ் அனந்த பத்மநாபன், கல்லூரி முதல்வா் டி.சரவணன், ஒருங்கிணைப்பாளா் என்.எஸ்.செந்தூா், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க