செய்திகள் :

போடி நகராட்சித் தலைவர் வீடு, கடைகளில் GST, ED, வருமானவரி மூன்று துறையினர் சோதனை - என்ன காரணம்?

post image

தேனி மாவட்டம் போடி நகராட்சி நகர் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. இவருடைய கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி 29ஆம் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர்களுடைய மகன் லோகேஷ் இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் தமிழகம்-கேரளா பகுதிகளில் ஏலக்காய் கொள்முதல் செய்து, வெளிமாநிலங்களுக்கு வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகை முன்பாக 300 டன் ஏலக்காய் போடி ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு சங்கர் மற்றும் அவருடைய மகன் லோகேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

சங்கர், அவருடைய மனைவி ராஜராஜேஷ்வரி
சங்கர், அவருடைய மனைவி ராஜராஜேஷ்வரி

இவ்வாறு அனுப்பப்பட்ட ஏலக்காய் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் ஆவணங்கள் இல்லாமல் சென்ற ஏலக்காயை கைப்பற்றியதாகவும், அது குறித்த விசாரணை மேற்கொண்டதில் தொடர்ச்சியாக ஆவணங்கள் இல்லாமல் பல வருடங்களாக இதுபோன்று ஏலக்காய் வட மாநிலங்களுக்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கர் வீட்டிற்கு வந்து விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்து சென்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராமல் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.

மகன் லோகோஷ்
மகன் லோகோஷ்

அதனைத் தொடர்ந்து நேற்று சங்கருக்கு சொந்தமான வீடு, ஏலக்காய் வர்த்தக குடோன், கேரளா - இடுக்கி மாவட்டம் கடுக்கன் சிட்டியில் உள்ள கடை மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்யத் தொடங்கினர். சங்கர், அவரது மனைவி ராஜராஜேஸ்வரி, மகன் லோகேஷ் மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் விசாரணைக்கு வரும் வரை சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போடி பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

"ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்வது மட்டுமின்றி, பா.ஜ.க தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள்" என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மதுர... மேலும் பார்க்க

”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொ... மேலும் பார்க்க

``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" - ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்

மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``கடந்த நான்கரை ஆண்ட... மேலும் பார்க்க

``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவற... மேலும் பார்க்க

முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின்.இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முத... மேலும் பார்க்க