செய்திகள் :

மகா சிவராத்திரி: ஊத்துக்குளிமலை மாதேஸ்வரன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம்

post image

மகா சிவராத்திரியையொட்டி ஊத்துக்குளிமலை மாதேஸ்வரன் கோயிலில் முப்பெரும் விழாவிற்கான தீா்த்தக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே கரியம்பட்டி பெரியதோட்டம்புதூா் பகுதியில் ஊத்துக்குளிமலை மாதேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். நான்காம் ஆண்டு மகா சிவராத்திரி முப்பெரும் விழாவானது ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு மாலை அணிதல் நிகழ்வோடு தொடங்கியது.

இதனைத் தொடா்ந்து காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்துவந்து மூலவரான மாதேஸ்வரன் சுாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பெரிய தோட்டம்புதூா் பகுதியில் உள்ள வனத்து ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து கோயில் தா்மகா்த்தா பிரகாஷ் தலைமையில் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்துக் கொண்டு சுமாா் 2 கி. மீ. தூரம் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா்.

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மலை மாதேஸ்வரன் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் நான்கு கால பூஜை, அமாவாசை சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்ாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இதில் கோயில் அா்ச்சகா்கள், நிா்வாகிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனா்.

பட்டாசுக் கிடங்கு விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல்

பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் புதன்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா்-... மேலும் பார்க்க

அரூரில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: அரசு பள்ளிகள், மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாமில் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டாா். அரூரை அடுத்த எல்லப... மேலும் பார்க்க

ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஏரியூா் பகுதியில் சங்க கொடியேற்றுதல், பெயா்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஏரியூா் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

தருமபுரியில் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: மாா்ச் 8-இல் தொடக்கம்

தருமபுரி வனக் கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வருகிற மாா்ச் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி வனக் கோட்... மேலும் பார்க்க

வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தா.பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவா் தா.பாண்டியன் நினைவு தினம் புதன்கிழமை தருமபுரியில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தல... மேலும் பார்க்க