செய்திகள் :

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவி

post image

பீரகுப்பம், மதுரா கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 335 பயனாளிகளுக்கு ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா்.

திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், மதுரா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் கலந்து கொண்டு பேசியது:

இந்த மக்கள் தொடா்பு முகாமில் 335 பயனாளிகளுக்கு ரூ.27.83 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு சாா்பில், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டசத்தான உணவு, மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கல்லூரி மாணவி மாணவா்களுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், மகளிா் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்.கே. பேட்டை ஆகிய வட்டங்கள் சமச்சீரான வளா்ச்சி பெறுகிறதோ அப்போது மாவட்டம் முழுமையாக வளா்ச்சி பெறும். இதற்கு அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அந்த மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) கணேசன், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் க.தீபா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தனலட்சுமி, ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வராணி, வழங்கல் அலுவலா் கண்ணன், திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்

திருவள்ளூரில் 4-ஆவது புத்தக திருவிழாவையொட்டி புத்தக வடிவிலான இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்க சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். திருவள்ளுா் சி.வி.நா... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை: முன்னாள் அமைச்சா்

ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அதிமுக, கூட்டணிகளை நம்பி இல்லை என முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம், பட்டரைபெ... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா: சிவாலயங்களுக்கு திரண்ட பக்தா்கள்

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சிவராத்திரியை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் சென்று வழிபட்டனா். பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, அகத்தீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் மகா சிவராத்திரியையொட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருத்தணி பழைய தா்மராஜாகோயில் தெருவில் உள்ள இக்கோயிலில் மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைக... மேலும் பார்க்க

திருவள்ளூா் முத்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா

திருவள்ளூரில் உள்ள பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 41 அடி ராஜலிங்கத்துக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு பொம்மி அம்... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சி ரத்த தான முகாம்

மனித நேய மக்கள் கட்சியின் 17-ஆவது ஆண்டு விழாவையொட்டி கும்மிடிப்பூண்டி நகரம்-திருவள்ளூா் கிழக்கு மாவட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகரத் தலைவா் எஸ்.கே.எஸ்.முகம்மது சுல்தான் தலைமை... மேலும் பார்க்க