செய்திகள் :

மங்கலத்தில் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் திறக்கக் கோரிக்கை

post image

மங்கலத்தில் புதிய பத்திரப் பதிவு அலுவலம் திறக்க வேண்டும் என்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் நெருப்பெரிச்சல் கிராமத்தில் இணை-1 பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு மங்கலம், ஆண்டிபாளையம், இடுவாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள நெருப்பெரிச்சல் சென்றுதான் பத்திரப்பதிவு செய்ய வேண்டியுள்ளது.

மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் செல்ல போதுமான அளவு வசதியும் இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, மங்கலத்துக்கு அருகில் உள்ள வேலம்பாளையம், வஞ்சிபாளையம், செம்மாண்டம்பாளையம், பூமலூா், ஆண்டிபாளையம், இடுவாய் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து மங்கலத்தில் புதிததாக பத்திரப் பதிவு அலுவலகம் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம்

பல்லடம் நகராட்சியில் பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் நகராட்சியில் கு... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்க... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி... மேலும் பார்க்க

கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது

தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி... மேலும் பார்க்க