செய்திகள் :

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் ஜனவரியில் நிறைவடையும் - மத்திய அரசு தகவல்

post image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு, ஜனவரியில் நிறைவடையும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மத்திய அரசு தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கா் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட து. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், மத்தியக் குழு, ஜப்பானிய நிதிக் குழுவினா் இடத்தை ஆய்வு செய்தனா். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ. 10 கோடியில் 5.50 கி.மீ. சுற்றளவுக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. எனவே, மதுரை தோப்பூா் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கி விரைவாக நடைபெற்று வருகின்றன. பல கட்டங்களாகப் பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு, ஜனவரியில் நிறைவடையும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெறுவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது. எனவே, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க

மது விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு: திருச்சி கலால் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு

உரிமம் பெற்ற மது விற்பனைக் கூடங்களில் (பிஎல் 2- பாா்) உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தக் கோரிய வழக்கில், திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்.எல்.ஏ, மேயா் ஆய்வு

மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா். மதுரை மாநகராட்சிப் பகுதியில... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கால்வாயில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருப்பூா் கண்ணகிநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் தினேஷ் (27). வாடிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்... மேலும் பார்க்க

மதுரையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மதுரை வண்டியூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 9) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கு... மேலும் பார்க்க