செய்திகள் :

மதுரை: "நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும்" - சசிகலா சூசகம்!

post image

"அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்" என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா

தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன், சர்ப்ரைஸாக எல்லாமும் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள், அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன்" என்றவரிடம்,

'செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு,

"யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம், எத்தனை பேரை கட்சியில் இருந்து எடுக்க முடியும் என? எம்ஜிஆரின் மறைவிலிருந்து கட்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். அதிமுக பழைய நிலைக்கு திரும்பும், இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன்" என்றவரிடம்

சசிகலா, எடப்பாடி பழனிசாமி

'2021-ல் துரோகிகளால் தோற்றோம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே' என்ற கேள்விக்கு,

"யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செய்வது என் பழக்கம் இல்லை. என்னைப் பற்றி சீனியர் லீடர்களுக்கு எப்படி டீல் செய்வேன் என தெரியும். பொறுமையாக இருங்கள், என் அனுபவம் என்னவென்று உங்களுக்கு தெரியும். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது ஜெயலலிதாவை திட்டியவர்கள், எதிர்த்தவவர்களைக் கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாகத் தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும்" என்றவர்,

"வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். திமுக ஆட்சியின்போது பலஆயிரம் வாக்குகளை நீக்கினார்கள், மோசடி செய்தார்கள்" என்றார்.

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க