செய்திகள் :

மது போதையில் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - கோவை மருமகன் கைது

post image

கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில் மகன் உள்ளார். அவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கோவை

இதனால் மணிகண்டன் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். மணிகண்டன் மகன் மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரின் 75 வயதான மாமியார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மணிகண்டன் திடீரென வீட்டு கதவை பூட்டியுள்ளார். தொடர்ந்து தன் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து மூதாட்டியை மீட்டுள்ளனர். இந்த தகவல் மணிகண்டனின் மகனுக்கு சொல்லப்பட்டது.

ஆத்திரமடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று, பொதுமக்களுடன் இணைந்து மணிகண்டனை தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கோவை அனைத்து (மத்திய) மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கைது

அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். காயத்துக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிகண்டணை காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb                                                                   

மும்பை ரயில் நிலையம்: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்; ரயிலில் தள்ளிக் கொன்ற நபர்; என்ன நடந்தது?

மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: குழந்தைகள் கண் முன் தாய் வெட்டிக் கொலை; சாயல்குடி அருகே கொடூரம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபு... மேலும் பார்க்க

போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரதட்சணை கொடுமைசாதாரண குடும்பம் முதல் வசதியான கு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க