செய்திகள் :

மராத்திக்கு எதிரான பேசினாரா ராஜஸ்தான் இளைஞர்? அடித்து ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற ராஜ் தாக்கரே கட்சி

post image

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்திக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே வெளிமாநிலக் கடைக்காரர்கள் மராத்தி பேசவில்லை என்பதற்காக அவர்களை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

மன்னிப்பு கேட்கும் கடைக்காரர்
மன்னிப்பு கேட்கும் கடைக்காரர்

ராஜ் தாக்கரே கட்சியின் இச்செயலை எதிர்த்து மும்பையில் வெளிமாநில வியாபாரிகள் பந்த் நடத்தினர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து இருந்தார். தற்போது ராஜ் தாக்கரே கட்சியினர் மீண்டும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவரை அடித்து உதைத்துள்ளனர்.

மும்பை விக்ரோலி தாக்குர் நகரைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு இருந்த பதிவில், ''ராஜஸ்தானியர்களின் சக்தியைப் பாருங்கள். மகாராஷ்டிராவில் மராத்தியர்களையே முந்திவிட்டோம். நாங்கள் மார்வாரிகள். எங்கள் முன்பு யாரும் நிற்க முடியாது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் வாட்ஸ் ஆப் பதிவை வெளியிட்ட கடைக்காரின் கடைக்கு வந்தனர். அவர்கள் தொழிலதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதோடு மராத்தியர்களை அவமதித்ததாகக் கூறி அக்கடைக்காரரை அடித்தனர். வாட்ஸ் ஆப் பதிவுக்காக மன்னித்துவிடும்படி கூறும்படி கூறினர். உடனே கடைக்காரரரும் கேமராவைப் பார்த்து மன்னித்துவிடும்படி கூறினார்.

தொழிலதிபர் கையெடுத்து கும்பிட்டு, "இனி இது போன்று தவறு செய்யமாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

அத்தொழிலதிபர் தனது இரண்டு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டு இனி இத்தவறைச் செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு விடாமல் அத்தொழிலதிபரை உள்ளூர் மார்க்கெட் வழியாக ஊர்வலமாக அழைத்துச்சென்று போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது முறைப்படி போலீஸில் புகாரும் செய்தனர்.

"இது போன்று இனி மராத்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் இனி எங்களது நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்" என்று ராஜஸ்தானி கடைக்காரரிடம் எச்சரித்துவிட்டு சென்றனர்.

மராத்தியவர்களை அவமதிக்கும் கடைகளில் மராத்தியர்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர்களில் ஒருவரான விஷ்வஜித் தெரிவித்தார்.

கடந்த வாரம் மும்பை விரார் பகுதியில் வடமாநில ஆட்டோ டிரைவர் ஒருவர் மராத்தி பேசாத காரணத்திற்காக அவரை அடித்து உதைத்தனர். அதோடு அவரை மன்னிப்பு கேட்கும்படி நிர்ப்பந்தம் செய்தனர். இச்சம்பவங்களை நவநிர்மாண் சேனாவினர் வீடியோ எடுத்து அதில் மராத்தி பாடலைச் சேர்த்து, "மராத்தியர்களுக்கு எதிராகப் பேசினாலோ அல்லது எழுதினாலோ இது போன்றுதான் நடத்தப்படுவார்கள்" என்று எழுதி அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

இமாச்சல் பிரதேசம்: ”எங்களுக்குப் பெருமைதான்” - ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள்; பின்னணி என்ன?

இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தத் திருமணம், பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் க... மேலும் பார்க்க

கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க

தங்க கடத்தல்: நடிகை ரன்யா ராவ் மீது cofeposa சட்டத்தில் வழக்கு பதிவு! - விவரம் என்ன?

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.12.56 கோடியாகும். விமான நிலையத்தில் பாதுகா... மேலும் பார்க்க

Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரலான பஹத் பாசில் போன்

மலையாளம் கடந்து தன் நடிப்புத் திறமையால் இந்தியளவில் புகழ் பெற்றவர் நடிகர் பஹத் பாசில். தமிழில் 'மாரீசன்' பட வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் பஹத... மேலும் பார்க்க

இங்கிலாந்து ஏலத்தில் விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் எண்ணெய் ஓவியம்; எத்தனை கோடிக்குத் தெரியுமா?

மகாத்மா காந்தி வரைவதற்கு அவர் அமர்ந்த ஒரே ஓவியம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இந்த அரிய எண்ணெய் ஓவியம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 175 கோடி ரூபாய்க்கு (சுமார் 17 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாக... மேலும் பார்க்க

கைகொடுக்காத நீட்; 20 வயதில் Rolls Royce-ல் ரூ.72 லட்சம் சம்பளம்! - கிராமத்து மாணவி சாதித்தது எப்படி?

கர்நாடகா மாநிலம் தீர்த்தஹலி தாலுகாவில் கொடுருகிராமத்துப் பகுதியைச் சேர்ந்தவர் ரிதுபர்ணா. உயர்நிலைப் படிப்பு, PUC முடித்தவுடன் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், நீட் தேர்வின்... மேலும் பார்க்க