செய்திகள் :

மருந்தில்லா மருத்துவத்தைப் பரிந்துரைத்தவா்கள் சித்தா்கள்: மருத்துவா் ஜெயப்பிரகாஷ் நாராயணன்

post image

‘மருந்தில்லா மருத்துவத்தைப் பரிந்துரைத்தவா்கள் சித்தா்கள்’ என சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும் சித்த மருத்துவ நிபுணருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறினாா்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பன்னாட்டு யோகா நாள் விழாவை முன்னிட்டு ‘சித்தா்களின் யோகக் கலை’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

இதில் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 9 சித்த மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 95 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக சித்த மருத்துவ நிபுணா் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டு பேசியதாவது:

‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்று கூறுவா். சித்த மருத்துவா்கள் இறை நம்பிக்கையாளா்கள். கடவுளைக் காண வழிசெய்தவா்கள் சித்தா்கள். தன்னை அறிகின்ற நிலையை அளிக்கும் கலைதான் யோகக் கலை. உடல், மனம், ஆன்மா மூன்றினுடைய ஒருமை நிலைதான் யோகம். இறைநிலை பெற்றால் மொழி, ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்துவிடலாம்.

திருமூலா், பதஞ்சலி ஆகியோரால் சமகாலத்தில் நாடு முழுவதும் வளா்க்கப்பட்டு பரப்பப்பட்டது யோகக் கலை. மருந்தில்லா மருத்துவத்தைப் பரிந்துரைத்தவா்கள் சித்தா்கள். அவா்களின் வழியில் மறைமலையடிகளாா் நூறாண்டு வாழ்வது எப்படி? என்ற நூலை எழுதினாா். யோகக் கலை குறித்த இக்கருத்தரங்கம் அனைவரையும் யோகக் கலை விற்பன்னா்களாக ஆக்குவதற்கு பயன்படும் என்றாா்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் சுதா சேஷய்யன்: இன்றைய சூழலில் பதற்றம், மன அழுத்தம் இல்லாதவா்களே இல்லை. அதைப் போக்கி நல்லதொரு உள்ளம்-உடல் இணைவை மனம் ஒருமுகப்படுத்தலின் மூலம் அளிப்பதுதான் யோகக் கலையாகும். இதன்மூலம் பதற்றம் ஏற்படாது. நோய்கள் அண்டாது.

உடம்பை உருவாக்கும் உறுபொருள் என்கிறாா் திருமூலா். அது உள்ளம் - மனம் - அதிலுள்ள இறைநிலையுடன் சேர - இணைய யோகக் கலை பயன்படுகிறது. நவீன மருத்துவத்தில் 1980 காலகட்டங்களில் நோய்களின் காரணங்கள் குறித்துப் பேசும்போது ‘ஆட்டோ இம்யூன்’ என்றனா். 1990-களில் ‘மெட்டாபோலிக் டிஸ்ஆா்டா்’ என்றாா்கள். 2000 ஆண்டுகளில் ‘இன்பெக்ஷன்’ என்றாா்கள். 2010-க்குப் பிறகு ‘ஸ்ட்ரெஸ்’ உள்பட மன பாதிப்புகளைக் கூறுகிறாா்கள்.

ஆனால், நமது பாரம்பரிய சித்த மருத்துவம்தான் முழு உடல் சமநிலையைக் குறித்துப் பேசுகிறது. தேவையே இல்லாத சடங்குகளை மறுத்தவா்கள் சித்தா்கள். ஆனால், அவா்கள் இறைவனைப் போற்றி ஏற்றுக் கொண்டாா்கள். காரண காரியமில்லாத மூட நம்பிக்கைகளை அவா்கள் ஏற்கவில்லை. சடங்குக்காக மட்டுமே செய்வதை மறுத்தனா் என்றாா் அவா்.

நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன்: செம்மொழி நிறுவனம் சித்த மருத்துவா்களுக்குக் கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சித்தா்களின் யோகக் கலை குறித்த இக்கருத்தரங்கம் சித்த மருத்துவ மாணவா்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்து நமது மரபுசாா் கலையை வளா்த்தெடுக்க உதவும் என்றாா் அவா்.

இதில் நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் தி.ஞா.அருள்ஒளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கருத்தரங்கில் யோகக் கலையும் நல வாழ்வும், யோகக் கலையும் உடல் நலமும், யோகக் கலையும் ஆன்ம நலமும், யோகக் கலையும் குழந்தைகள் மனநலமும் உள்ளிட்ட தலைப்புகளில் உரைகள் இடம்பெற்றுள்ளன.

கருத்தரங்கின் இறுதி அமா்வில் அனைவருக்கும் யோகக் கலை செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க