செய்திகள் :

மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!

post image

ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில் மர்ம நபர்கள் சிலர் தோழியின் வீட்டிற்குச் செல்வதற்காக சாலையில் நடந்துசென்ற 15 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுள்ளது.

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ஒடிஸா முதல்வர் மோகன் சரன் மஜ்ஜி கூறியதாவது; “ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நடைபெற்ர சம்பவத்தைத் தொடர்ந்து, புரி மாவட்டத்திலுள்ள பாலங்காவில் கொடுஞ்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீக்கயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு உடலில் 70 சதவீதம் தீக்காயம் உண்டாகியுள்ளது. அவரது உயிரைக் காப்பற்ற அவருக்கு தீவிர சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை விமான ஆம்புலன்ஸ் சேவை மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Odisha: A 15-year-old girl was set on fire: With 70% burn injuries, she will be airlifted to Delhi AIIMS

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க