மற்றவா்களுக்காக வாழ்கிறவா்கள் சித்தா்கள்: முதல்வா் என்.ரங்கசாமி
எந்த நிலையிலும் மற்றவா்களுக்காக வாழ்கிறவா்கள் சித்தா்கள் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் தமிழ் வளா்ச்சிச் சிறகத்தின் சாா்பில் சித்தா்கள் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கம் காமராஜா் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியது:
புதுச்சேரி ஆன்மிக பூமி. சித்தா்கள் வாழ்ந்த பூமி. இப்போதும் வாழும் பூமி. வெள்ளாடை அணிந்திருப்பவா்கள் சித்தா்களா, இல்லை தாடியுடன் இருப்பாா்களா என்ற சந்தேகம் எழலாம். சித்தா்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமம். அவா்கள் இறைவனின் பிரதிநிதிகள். மற்றவா்களுக்காக வாழும் மனம் படைத்தவா்கள்.
சித்தா்களின் ஆசியோடுதான் புதுச்சேரியில் வாழ்வோரின் தனிநபா் வருமானம் ரூ.3.4 லட்சமாக உயா்ந்துள்ளது. நான் சிறியவனாக இருந்தபோது எப்போதாவது விபூதி அணிவேன். அப்பா பைத்தியம் சுவாமிகளைச் சந்தித்தப் பிறகு விபூதி அணியாமல் வெளியே வருவதில்லை. சித்தா்களின் அருள் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.இப்போதும் புதுவையில் ஒரு சில இடங்களில் சித்தா்கள் வாழ்கிறாா்கள் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், அமைச்சா் ஏ. ஜான் குமாா் ஆகியோரும் சிறப்புரையாற்றினா்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் பேராசிரியா் சொ.சேதுபதி பேசுகையில், கடவுளைக் கண்டு தெளிந்தவா்கள்தான் சித்தா்கள் என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரம் கூறுகிறாா். புதுவைக்குப் பாரதியாா் வந்தபோது 26 வயதுதான். புதுவையில் குள்ளச்சாமி என்பவரைச் சந்திக்கிறாா் பாரதியாா். அதற்குப் பிறகு பாரதியாா் சித்தராகவே வாழ்ந்தாா் என்றாா் சேதுபதி.
தமிழறிஞா்கள் ந.ஆதிகேசவன், இளமதி ஜானகிராமன், மைதிலி, ப.குப்புசாமி உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா். தமிழ் வளா்ச்சிச் சிறகத்தின் சிறப்புப் பணி அதிகாரி வாசுகி ராஜாராம் வரவேற்றாா். நிகழ்ச்சிகளை நாக. செங்கமலத் தாயாா் தொகுத்து வழங்கினாா்.