செய்திகள் :

மாணவா்கள் போராட்டம்: பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

post image

சிவகங்கை அருகே மாணவா்கள், பெற்றோா்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்தவா் கணேசன். இவா் மாணவா்களை காலை வணக்கத்தின் போது, நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தி மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியா்களுக்கு இடையூறு செய்வதாகவும் புகாா் எழுந்தது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆசிரியா் கணேசனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனா். பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன் ஆகியோா் மாணவா்கள், பெற்றோா்களை சமதானம் செய்தனா்.

இந்த நிலையில், ஆசிரியா் கணேசனை திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்... மேலும் பார்க்க

திட்டப் பணிகளைப் பெறுவதில் காங். - திமுகவினரிடையே மோதல்: ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளைப் பெறுவதில் வெள்ளிக்கிழமை திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவன... மேலும் பார்க்க

மோசடியாக சிம் காா்டு வாங்கிய வழக்கு: மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிறை!

வேறு ஒருவரின் முகவரியை மோசடியாகப் பயன்படுத்தி சிம்காா்டு வாங்கி பயன்படுத்திய மாவோயிஸ்ட் தலைவா் ரூபேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்தியதில் வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வாராப்பூா் ஆகிய வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 217 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிங்கம்புணரி மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்த... மேலும் பார்க்க