செய்திகள் :

`மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் குழந்தை பிறந்துள்ளது!’ - அறிவித்த ஜாய் கிறிசில்டா

post image

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டாவுக்கும் இடையிலான பிரச்னை ஊர் அறிந்ததே.

ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் ரங்கராஜ் ஜாயுடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த ஜாய், ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும் ஆனால் தற்போது தன்னுடன் சேர்ந்த வாழ மறுப்பதாகவும் கூறி போலீசில் புகார் செய்தார்.

தொடர்ந்து இருவருக்குமிடையிலான பிரச்னை வளர்ந்து கோர்ட், மகளிர் ஆணையம் வரை வந்து விட்டது.

ஜாய் கிறிசில்டா
ஜாய் கிறிசில்டா

இந்தப் பிரச்னையை சட்டப்படி சந்திக்க உள்ளதாக கூறியிருக்கிறார் ரங்கராஜ்.

மேலும் சில தினங்களுக்கு முன் தனக்கும் வயிற்றிலிருக்கும் தன் குழந்தைக்கும் பராமரிப்புச் செலவாக மாதம் ஆறரை லட்சம் தர ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஜாய் கிறிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஜாய் கிறிசில்டா தனது சமூக வலைதளபக்கத்தில், `மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது!’ என அறிவித்துள்ளார்.

BB Tamil 9: "Best Performer யார்?" - பிக் பாஸ் கேட்ட கேள்வி; ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பதில் என்ன?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு க... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 32: `அழுகை, அழுகை, அழுகையோ அழுகை'; சாண்ட்ராவின் அலப்பறை; விருந்தினர்களின் கோபம்

சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார்.ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: "பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க"- மோதிக்கொள்ளும் FJ, அமித் பார்கவ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!"- கலங்கிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

"நான் என் கணவரை இறுதிவரை நின்று காப்பாற்றுவேன்" - ஸ்ருதி ரங்கராஜ் அறிக்கை

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தை சமீபத்தில் மகளிர் ஆணையம் (Women's Commission) விசாரணை செய்திருந்தது. இதுகுறித்து "ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்ததாகவும், க... மேலும் பார்க்க