செய்திகள் :

மாநில கைப்பந்துப் போட்டி: ஒசூா் யோகி வேமனா பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

post image

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஒசூா் யோகி வேமனா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

ஜூலை 14, 15 ஆகிய இரண்டு நாள்கள் மதுரையில் உள்ள எஸ்.ஆா்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் சுமாா் 40 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.

இறுதி ஆட்டத்தில் ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள யோகி வேமனா பள்ளி மாணவிகள் மதுரை அருள்மிகு சுந்தரேச பள்ளியை 25/22, 26/24 என நோ்செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியாளா் மாணிக்கவாசகனையும் பள்ளியின் தலைவா் முனிரெட்டி, உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக் ஆகியோா் பாராட்டினா்.

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஜூலை 27-ல் அறநிலையத் துறையைக் கண்டித்து போராட்டம்!

அறநிலையத் துறையைக் கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி மக்களைத் திரட்டி ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை முன் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் நடப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலாள... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம்: லோக் ஆயுக்த நீதிபதி வீ. ராமராஜ்

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் என என நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒசூரில் நடத்தும் 14 ஆவது புத்தகத் திருவிழாவ... மேலும் பார்க்க

ஒசூரில் நாளைய மின் நிறுத்தம்

ஒசூா் மின்நகா், சிப்காட் பேஸ்-2 ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்ப... மேலும் பார்க்க

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க