செய்திகள் :

மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்

post image

மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.

விமானத்தில் இருந்த மூவர் ஆபத்தை உணர்ந்து விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியுள்ளனர். விமானியும் பாதுகாப்பாக வெளியேறினார். விபத்துக்குள்ளான விமானம் தாம்பரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் அப்பகுதியில் இருந்த பழைய தொழிற்சாலை ஒன்றில் மோதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுரம் அருகே விமான விபத்து

வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை ‘பிலாட்டஸ் பிசி-7’ என்ற விமானம்தான் விபத்திற்குள்ளாகியிருக்கிறது எனத் தெரிய வந்திருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய விமானப்படை குழு, விமானத்தில் இருந்து உயிர் தப்பியவர்களை மீட்டு உடனே ஹெலிகாப்டரில் சிகிச்சைகாக மீட்டுச் சென்றிருக்கிறது. இந்த விபத்துக் குறித்த காரணத்தைக் கண்டறியும் விசாரணைக்கு நீதிமன்றம் (COI) உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்ப... மேலும் பார்க்க

மாவீரர் மாதத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேசும் விஜய்? - நா.த.க-வின் அரசியல் கணக்கு!

'விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு' என சொல்லப்பட்டுவரும் சூழலில், த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் தகவல்கள் நாம் தமிழர் கட்சியினரை நிம்மதியடையச... மேலும் பார்க்க

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி | Photo Album

இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்கா... மேலும் பார்க்க

தேனி: ``பள்ளிப் பாதையில் குவியும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்'' - பெற்றோர்கள் வேதனை

தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகளை கொட்டு... மேலும் பார்க்க

'மேயர் பிரியா டு பத்மபிரியா' - தலைநகர் சீட் ரேஸில் திமுக ஜூனியர்கள்? ; விடாப்பிடி சீனியர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தலைநகர் தொகுதிகளை குறிவைத்து தி.மு.க ஜூனியர் நிர்வாகிகள் காய்நகர்த்தி வருவதை, சீனியர்கள் பலரும் ரசிக்கவில்லை என முணுமுணுக்கிறார்கள் விவரமறிந்த அறிவாலயப் புள்ளிகள். ... மேலும் பார்க்க

``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக அருண்ராஜ் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.தவெக வை அதிமு... மேலும் பார்க்க