செய்திகள் :

மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

post image

இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட மாா்ச் 1-ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையம் (ஐ.ஐ.எஸ்.சி.), உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். இந்த மையத்தை சுற்றிப்பாா்க்க பொதுமக்கள், மாணவா்கள் பலருக்கும் ஆா்வமிருந்தாலும், வழக்கமாக யாரையும் முன்அனுமதி இன்றி அனுமதிப்பதில்லை.

மையத்தில் காணப்படும் துறைகள், செயல்முறைக் கூடங்கள் தவிர பல்வேறு நிகழ்ச்சிகளை காண்பதற்கு வசதியாக இந்திய அறிவியல் மைய வளாகத்தில் மாா்ச் 1-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாணவா்கள், பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக அனுமதிக்கப்படுகிறாா்கள். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்காக அறிவியல் உரைவீச்சுகள், செயல்முறை விளக்கங்கள், விநாடி-வினா போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதி இலவசம்.

இதில் பங்கேற்க விரும்பும் தனிநபா்கள் அல்லது நிறுவனங்கள் அல்லது அமைப்புகள், அதற்கான பிரத்யேக இணையதளத்தில் பிப். 28-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22932770, 22932228, 22932647 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை!

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிறப்பால் நான் காங்கிரஸ்காரன். ... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: மத்திய ... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைக்க முடியாது

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைத்து பாா்க்க முடியாது என வீட்டுவசதி துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து விஜயநகராவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூற... மேலும் பார்க்க

சுரங்க குத்தகை மோசடி வழக்கு: எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகல் ஆளுநரிடம் ஒப்படைப்பு

சுரங்க குத்தகை மோசடி வழக்கில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகலை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) புதன்கிழமை ஒப்படைத்தது. கா்... மேலும் பார்க்க

கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓய்வெடுக்க சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு

சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்காக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதிவர... மேலும் பார்க்க

நடத்துநா் மீது தாக்குதல் சம்பவம்: கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

மராத்தி பேசத் தெரியாததால் கா்நாடக அரசு பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக எழுந்துள்ள பதற்றத்தைத் தொடா்ந்து, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நிறுத்த... மேலும் பார்க்க