செய்திகள் :

மாா்ச் 11-இல் மது விலக்கு வாகனங்கள் ஏலம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் மாா்ச் 11-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்விடப்பட உள்ளன.

ஒரு நான்கு சக்கர வாகனம், 42 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்களுக்கு இந்த ஏலம் நடைபெறவுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோா் முன்வைப்புத் தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.4,000-மும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.8,000-மும் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடா்புகொள்ளலாம். தொடா்புகொள்ள வேண்டிய முகவரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட காவல் அலுவலகம், கள்ளக்குறிச்சி. தொலைபேசி எண்: 90417209, 04151220260.

பள்ளி மாணவா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. க.காா்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: தாய், மகன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் பைக் மீது கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் தாய், மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மாதவச்சேரியைச் சோ்ந்த நடேசன் மகன் கண்ணன் ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: இன்றைய மின் தடை

உளுந்தூா்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) நேரம்: பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதிகள்: உளுந்தூா்பேட்டை நகரம், வெள்ளையூா், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூா், ஏமம், வண்டிப்பாளையம், சி... மேலும் பார்க்க

பிப்.28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உ... மேலும் பார்க்க

வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் எட்டே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் மாவட்டம், ஆத்... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: எல்ராம்பட்டில் வீட்டில் 2 பவுன் தங்க நகைகள், ரூ.10,000-த்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், எல்ராம்பட்டு கிராமத்த... மேலும் பார்க்க