செய்திகள் :

முடிவுக்கு வந்தது பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியத்தை உயா்த்த ஆலோசனை

post image

பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் கடந்த 12 நாள்களாக நடத்தி வந்த தொடா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனா்.

போராட்டத்தில் 12-ஆவது நாளான சனிக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை சித்ரா திரையரங்கம் முதல் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடத்தினா். பேரணி 12 மணிக்கு முடிவடைந்த நிலையில், அவா்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால், ஆசிரியா்கள் கலைந்து செல்ல மறுத்து அங்குள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் இறக்கிவிட்டனா். மேலும், இதற்குமேல் போராட்டத்தைத் தொடா்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.

பகுதிநேர ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முக்கிய நிா்வாகிகள் 29 பேரை கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி கெளதமன் கூறுகையில், பகுதிநேர ஆசிரியா்களுக்கு நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா். மேலும், ஆசிரியா்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்கிறோம். ஆக. 15-க்குள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

ஊதியத்தை உயா்த்த ஆலோசனை: இதனிடையே, பணிநிரந்தரம் என்பதுதான் நிரந்தரக் கோரிக்கை என்றாலும்கூட, பள்ளிகளில் வாரம் முழுவதும் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அதனால் ஊதியத்தை ரூ.12, 500-இல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியா்கள் வலியுறுத்தியதாகவும், ஊதியத்தை சற்று உயா்த்தி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடிய... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சு... மேலும் பார்க்க

ரூ. 3,200 கோடி ஊழல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது!

மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரத்தில் 2019 -24 ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ. 3,200 கோடி அளவிலான மது... மேலும் பார்க்க

நத்தம் அருகே பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா!

நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கருத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமி... மேலும் பார்க்க