செய்திகள் :

மும்பை: பக்ரீத் ஆடுகளை அகற்ற கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை; பன்றியை கொண்டு வந்த இந்து அமைப்புகள்

post image

பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் விலங்குகளை பலியிடுவது வழக்கம். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான ஆடுகளை தாங்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் பலியிடுவது வழக்கம். மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள பூனம் குடியிருப்பு வளாக கட்டடத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகைக்கு பலியிடுவதற்காக மார்க்கெட்டில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து நிறுத்தி இருந்தனர். இதற்காக தற்காலிக குடில் ஒன்றையும் அமைத்து இருந்தனர். ஆனால் அக்கட்டடத்தில் வசிக்கும் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியில் புகார் செய்ததால் அந்த தற்காலிக குடிலை மாநகராட்சியினர் அகற்றினர்.

ஆனாலும் ஆடுகளை கட்டட வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதையடுத்து இவ்விவகாரத்தில் இந்து அமைப்புகள் தலையிட ஆரம்பித்தனர்.

அவர்கள் இரவில் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த முஸ்லிம்களுடன் வாக்குவாதம் செய்து ஆடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

அதோடு கட்டட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50 ஆடுகளை மாநகராட்சியினர் நான்கு வாகனங்களில் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பதட்ட்ம ஏற்பட்டது. முஸ்லிம்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி அழைத்துச் சென்ற ஆடுகளை மீண்டும் கட்டட வளாகத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கேள்விப்பட்டதும் விஷ்வ இந்து பரிஷத் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் அக்கட்டட வளாகத்தின் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.

இதனால் பாதுகாப்புக்கு 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சில இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் ஹனுமான் பாடலை பாடி கோஷமிட்ட படி போராட்டம் நடத்தினர். அதோடு போராட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கட்டட வளாகத்திற்கு ஒரு பன்றியை கொண்டு வந்தார். இதனால் மேலும் பதட்டம் ஏற்பட்டது. அந்த பன்றியை போராட்டக்காரரிடமிருந்து போலீஸார் விரட்டிச்சென்று பிடித்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த பன்றியை சில போராட்டக்காரர்கள் போலீஸாரிடமிருந்து பறிக்க முயன்றனர். பன்றியை கொண்டு வந்தது குறித்து போராட்டக்காரர்களிடம் பேசியபோது, பலிக்காக ஆடுகளை வளர்ப்பதைக் கண்டிக்கும் விதமாக, "வராக பூஜையை" நடத்துவதற்காகவே அந்த பன்றி கொண்டுவரப்பட்டதாக கூறினர். இருப்பினும், வராக பூஜை" என்பது 'வராக ஜயந்தி' நாளிலேயே நடத்தப்படுகிறது. இது, விஷ்ணுவின் பன்றி அவதாரத்தின் பிறந்தநாளான செப்டம்பர் 12-ஆம் தேதியன்று வருகிறது. இப்போராட்டத்தால் அங்கு பாதுகாப்புக்கு தொடர்ந்து போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மும்பையிலும் குடியிருப்பு வளாகத்தில் ஆடுகள் பலியிட தடை விதிக்கவேண்டும் என்று கோரி மாநகரட்சி கமிஷனரிடம் புகார் செய்தனர்.

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' - விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா வந்தது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நய... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் குப்பைகளை கொட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தவெக திருவெறும்பூர்... மேலும் பார்க்க

`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' - பொன்முடி சாடல்

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, "முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை: ``எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக..." - ஸ்டாலின் கண்டனம்!

கேரள முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை இன்று (மே 27, 2026) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிம மண... மேலும் பார்க்க

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' - விஸ்வநாதன்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் வ... மேலும் பார்க்க