செய்திகள் :

மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் !

post image

சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.

மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு முத்தமிழறிஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம்! 30 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய மு.க. முத்து!

தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையடுத்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Karunanidhi's eldest son M.K. Muthu laid to rest at Besant Nagar Crematorium.

ஜூலை 22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்தது பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியத்தை உயா்த்த ஆலோசனை

பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் கடந்த 12 நாள்களாக நடத்தி வந்த தொடா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனா். போராட்டத்தில் 12-ஆவது நாளான சனிக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர... மேலும் பார்க்க

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழு தேவை: நயினாா் நாகேந்திரன்

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட ப... மேலும் பார்க்க

வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மைக் காப்பாற்றும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

‘வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மை காப்பாற்றும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் ஓம் சாரிட்டபிள்... மேலும் பார்க்க

தமிழில் இயங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இணையதளம்: 4.50 லட்சம் பாா்வைகளைக் கடந்தது!

வீடு தேடி அரசு சேவைகளை அளிக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கான பிரத்யேக இணையதளம், ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களிடம் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க

வங்கிக் கடன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1991 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில், சென்னை... மேலும் பார்க்க