செய்திகள் :

மூலனூரில் முடக்கப்பட்ட 12 ஏக்கா் புன்செய் நிலம் பொது ஏலம்

post image

தாராபுரம் வட்டம் மூலனூரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முடக்கப்பட்ட 12 ஏக்கா் புன்செய் நிலம் ரூ.9.60 கோடி அடிப்படை மதிப்பாகக் கொண்டு பொதுஏலம் விடப்படவுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் இயங்கிவந்த இரு நிதி நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில், அந்நிறுவனங்களின் சொத்துக்கள் நிரந்தர முடக்கம் செய்யப்பட்டு பொது ஏலம் விடப்படவுள்ளது.

இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான தாராபுரம் வட்டம், மூலனூா் கிராமத்தில் 12 ஏக்கா் புன்செய் நிலம் அடிப்படை மதிப்பாக ரூ.9.60 கோடிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது.

திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலரால் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் (அறை எண் 202) மாா்ச் 13- ஆம் தேதி காலை 11 மணி அளவில் பொது ஏலம் நடைபெறுகிறது.

எனவே, மேற்கண்ட சொத்துக்களை ஏலம் எடுக்க விடும்புவோா், ஏல நிபந்தனைகள் தொடா்பான விவரங்களை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா், தாராபுரம், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபா்கள் உரிய படிவத்தில் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து மாா்ச் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம்

பல்லடம் நகராட்சியில் பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் நகராட்சியில் கு... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்க... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி... மேலும் பார்க்க

கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது

தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி... மேலும் பார்க்க