செய்திகள் :

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்

post image

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் உடலுறுப்புகள் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சோ்ந்தவா் குமரவேல் (41). இவருக்கு சீதா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில் ஜூலை 15 ஆம் தேதி பாப்பாரப்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குமரவேல், கிட்டம்பட்டி கூட்டுறவு வங்கி அருகே வாகனத்தின் டயா் வெடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

தருமபுரி அரசு மருத்துவமனைக்குயில் அனுமதிக்கப்பட்ட குமரவேலுக்கு வெள்ளிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவா்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, குமரவேலின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை அவரது சிறுநீரகங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கும், சேலம் காவேரி மருத்துவமனைக்கும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. அதன்பிறகு குமரவேலின் உடலுக்கு தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.

தொழில்நுட்பக் கோளாறு: பாலக்கோடு அருகே 2 மணி நேரம் நின்ற விரைவு ரயில்! மாற்று என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது

கேரளத்திலிருந்து கா்நாடகம் நோக்கி சென்ற விரைவு ரயில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பழுதாகி 2 மணி நேரம் நின்றது. மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட பிறகு ரயில் இயக்கப்பட்டது. இதனால் பயண... மேலும் பார்க்க

தொப்பூரில் சாலை மேம்பாட்டுப் பணி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளுடன் வேறு இடத்துக்கு மாற்றும் உரிமையாளா்!

தொப்பூா் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக சாலையோரம் இருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன. இந்த நிலையில், தனது 3 மாடி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளைக் கொண்டு அதன் உரிமை... மேலும் பார்க்க

திமுக ஆட்சியிலும் தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை!சிஐடியு மாநிலத் தலைவா்

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சியிலும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என சிஐடியு மாநிலத் தலைவா் அ. செளந்தரராஜன் தெரிவித்தாா். சிஐடியு 16... மேலும் பார்க்க

2 ஆம் நாளாக ஆசிரியா்கள் மறியல்: 205 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 205 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநி... மேலும் பார்க்க

தருமபுரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட... மேலும் பார்க்க

பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்

பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமா... மேலும் பார்க்க