செய்திகள் :

"மேக் இன் இந்தியா" என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல்

post image

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80 சதவீத உதிரிப் பாகங்கள் சீனாவிலிருந்து வருகின்றன. மேக் இந்தியா என்ற பெயரில், நாம் ஒன்றுகூடி உற்பத்தி செய்கிறோமே தவிர உண்மையிலேயே தயாரிக்கப்படவில்லை. ஐபோன்கள் முதல் டிவி வரை தயாரிக்கத் தேவையான பாகங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை ஒன்றாக இணைக்கிறோம்.

சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்ளை இல்லாததும், அதிக வரிகளும், நாட்டின் தொழில்துறையை கார்போரெட் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.

இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வரை வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் மேக் இன் இந்தியா பற்றிய பேச்சுகள் வெறும் பேச்சுகளாகவே இருக்கும். இந்தியா உண்மையான உற்பத்தி சக்தியாக மாறுவதற்குச் சீனாவுடன் சமமாக போட்டியிடுவதற்கும் அடிமட்ட அளவில் மாற்றம் தேவை.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, மோடி அரசின் 'மேக் இன் இந்தியா' முயற்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கை மீட்டெடுக்கத் தவறிவிட்டது என்றும், இது 2014 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குறைவு என்றும் ராகுல் குற்றம் சாட்டினார்.

கடந்த பத்து ஆண்டுகளாக சீனா பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் பணியாற்றி வருவதாகவும், இந்தத் துறையில் இந்தியாவை விட குறைந்தது பத்து ஆண்டுகள் முன்னிலை வகிப்பதாகவும் அவர் கூறினார். உலகம் தொழில்நுட்ப, பொருளாதார புரட்சியின் விளிம்பில் நிற்கும்போது, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் பங்கேற்புக்கான புதிய பார்வை இந்தியாவுக்குத் தேவை என்று அவர் கூறினார்.

Lok Sabha Rahul Gandhi on Saturday stated that India in the name of "Make in India" is merely assembling products and not truly manufacturing them.

இதையும் படிக்க:மதசார்பற்ற சக்திகளை ராகுல் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது: ஜான் பிரிட்டாஸ்

அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவியை (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்) தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஹரியாணாவில் நில ... மேலும் பார்க்க

2027-க்குள் 3-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா: அமித் ஷா உறுதி

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு உத்த... மேலும் பார்க்க

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தெலங்கானா... மேலும் பார்க்க

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 8 புதிய மசோதாக்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை... மேலும் பார்க்க