செய்திகள் :

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

post image

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் கட்டுமானத்தில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்தது. அவரது தந்தை காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பிதாம்பூர் நகரில் அமைந்துள்ள வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக உள்ளூர் காவல் நிலைய அதிகாரி ஓம் பிரகாஷ் அஹிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கனமழையைத் தொடர்ந்து, கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு சுவர் பலவீனமடைந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் இடிந்து விழுந்ததாகவும், பிறந்து இரண்டு மாதமேயான குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையும் அவரது தந்தையும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சாக்ஷி என அடையாளம் காணப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அவரது தந்தை தஷ்ரத் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி கூறினார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

A two-month-old girl died and her father was injured when a wall of an under-construction house collapsed after heavy rains in Madhya Pradesh's Dhar district in the wee hours of Thursday, police said.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை! இந்தியாவில் எங்கு அமைய உள்ளது?

ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேய... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தமாகாளி படகுப் பாதையில் இருந... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.அகமதாபாத்தில் கடந்த ஜூ... மேலும் பார்க்க

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி !

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின் மனைவி புஷ்பா தே... மேலும் பார்க்க

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் வீட்டில் திருட்டு !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கே... மேலும் பார்க்க