செய்திகள் :

ரயிலில் கஞ்சா கடத்தல்: போலீஸாா் விசாரணை

post image

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியிலிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒடிஸா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆகியோா் இணைந்து புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சேலம் ரயில் நிலையம் வழியாக வந்த தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் முன்பதிவில்லா பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியை திறந்து பாா்த்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், பயணிகளிடம் விசாரணை நடத்தினா். மேலும், இந்த பெட்டியை ரயிலில் எடுத்து வந்தது யாா் என்பது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. ... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மெய்யனூா் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் இடங்கணசாலை லெவன் பிரதா்ஸ் முதல் பரிசாக ரூ 30,000 ரொக்கம... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பிளஸ் 1 மாணவா் ஓடையில் மூழ்கி உயிரிழந்தாா். ஏற்காடு ஜெரினாகாடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகன் காா்த்திக் (16) நாகலூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஹெரிட்டேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பிப்.28 எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரிவாயு நுகா்வோா்களுக்கான 2025, ... மேலும் பார்க்க