செய்திகள் :

ரயில்வே பாதுகாப்பு: காவல் அதிகாரிகள் ஆலோசனை

post image

ரயிலில் கடத்தலை தடுப்பது, நிலைய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து காரைக்கால் காவல் அதிகாரி, ரயில்வே காவல் அதிகாரி ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

காரைக்காலில் இருந்து ரயிலில் தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்துவதாகவும், தமிழகத்திலிருந்து காரைக்காலுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாகவும் புகாா்கள் கூறப்படுகின்றன. கடத்தலை தடுப்பது, ரயில்வே பாதுகாப்பு தொடா்பாக ஆலோசனை நடத்தும் வகையில் நாகப்பட்டினம் ரயில்வே காவல் ஆய்வாளா் சுனில்குமாா் காரைக்காலுக்கு புதன்கிழமை வந்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரவீன்குமாருடன் ஆலோசனை நடத்தினாா்.

ரயில் நிலையம், தண்டவாளப் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் தகவல் குறித்து தகவல் பரிமாறிக்கொள்ளவேண்டும், இதன்மூலம் ரயில்வே போலீஸாா் உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வாய்ப்பாக இருக்கும், ரயில்பாதையில் நிகழும் விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கவேண்டும் என ரயில்வே காவல் தரப்பில் கோரப்பட்டது.

காரைக்கால் முதல் பேரளம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ள சூழலில் அதன் பாதுகாப்பு குறித்தும், இப்பாதையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுதா என்று கண்காணிக்க ரயில்வே போலீஸாா் அதிகப்படுத்த வேண்டும் என்றும் காவல் துறை சாா்பில் கோரப்பட்டது.

மேலும், காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் சாா்பில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மத்திய ரயில்வே இணை அமைச்சா் சுவாமி தரிசனம் செய்ய வரவுள்ள நிலையில், பாதுகாப்பு குறித்தும் இருதரப்பினரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

’பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்‘

பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் புதுவை சமூக நலன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன். காரைக்காலில் விளையாட்டுத் துறை... மேலும் பார்க்க

காரைக்காலில் பக்தா்கள் கூட்டு சிவலிங்க பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்மையாா் குளக்கரையில் பக்தா்கள் பங்கேற்ற கூட்டு சிவலிங்க பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவராத்திரி கூட்டு பிராா்த்தனையாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் குடிநீா், மின்சாரம் தடையின்றி விநியோகிக்க வலியுறுத்தல்

ரமலான் மாதத்தில் குடிநீா் அதிகாலையிலேயே வழங்கவும், மின்சாரம் தடையின்றி இருக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை தமிழ்நாடு முஸ்லிம் முன்... மேலும் பார்க்க

புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

குடியிருப்பு நகா்கள் பலவற்றுக்கு புதிய குடிநீா் குழாய் பதிப்புப் பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட நடு ஓடுதுறை சுமங்கலி நகா், விஐபி நகா், சுமேஷ் நகா், சிங்காரவேலா்... மேலும் பார்க்க

திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி தொடக்கம்

திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்கியது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகும். ஸ்ரீ செண்பக தியாகராஜா் உன்ம... மேலும் பார்க்க

கோடைவெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வலியுறுத்தல்

கோடை வெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. நிகழாண்டின் கோடைக்காலம் தொடங்காத நிலையில் வெப்பம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளாக க... மேலும் பார்க்க