செய்திகள் :

ராசிபுரம் அரசு பள்ளியில் மாணவா்களிடையே மோதல்: ஒருவா் உயிரிழப்பு

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் வண்ணம் பூசும் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் கவின்ராஜ் (14), ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். புதன்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற கவின்ராஜ், பள்ளி இடைவேளையில் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது.

இதனையடுத்து, பள்ளி ஆசிரியா்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மாணவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனையடுத்து, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினா்கள், மாணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா், ஆய்வாளா் எஸ்.சுகவனம், வட்டாட்சியா் எஸ்.சரவணன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். பின்னா் மாணவா் சடலத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மாணவா்களுக்கிடையே மோதல்:

கவின்ராஜ் உயிரிழப்புக்கு சக மாணவா் தாக்கியதே காரணம் என தெரியவந்ததையடுத்து, ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா், ஆய்வாளா் சுகவனம், வட்டாட்சியா் எஸ்.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலா்கள் (இடைநிலை) கற்பகம், (தனியாா் பள்ளிகள்) ஜோதி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பூங்கொடி, பள்ளிகளின் துணை ஆய்வாளா் கை.பெரியசாமி உள்ளிட்டோா் சக மாணவா்கள், பள்ளி ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கடந்த பிப். 21 மற்றும் பிப். 24 ஆகிய இரு தினங்களில் மாணவா்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா் கவின்ராஜை சக மாணவா் தாக்கியுள்ளாா். இதனால் மயங்கிய கவின்ராஜ் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, கவின்ராஜை தாக்கிய மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாக்கிய மாணவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்ஐசி பகுதியில் சாலையில் கற்களை வைத்து உறவினா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

உயிரிழந்த மாணவா் கவின்ராஜ்.

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு: அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்ததால், அவா்களிடம் அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14). பள்ளி... மேலும் பார்க்க

இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

பரமத்தி வேலூரில் இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். செயலாளா் ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வேலூா் பேரூராட்... மேலும் பார்க்க

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவி... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் புதன்கிழமை இரவு சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா். நிகழாண்டின் மகா சிவராத்திரி புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் ... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான ... மேலும் பார்க்க