செய்திகள் :

ராஜபாளையத்தில் புதிய மயானம் கட்டித் தரக் கோரிக்கை

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மயானத்தைப் புதிதாகக் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ளவா்கள், கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மயானத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மயானத்தின் சுற்றுச் சுவா் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. புதிய மயானம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும், பணிகள் நடைபெறாததால் இறுதிச் சடங்குக்குச் செல்லக் கூடிய பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்தி, மயானத்தைப் புதிதாகக் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கைப்பேசியைத் திருடிய இருவா் கைது

சிவகாசி அருகே பேருந்து நிறுத்தத்தில் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி காரனேசன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ், தனது நண்பருடன் பே... மேலும் பார்க்க

அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்த வேண்டும்: நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன்

அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தி, மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி காள... மேலும் பார்க்க

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோ... மேலும் பார்க்க